முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிருகங்களை_நேசிப்போம்

"என்னுடைய முதல் சிறுகதையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தவறிருப்பின் மன்னியுங்கள்."



மிருகங்களை_நேசிப்போம்.




ஐந்து நாய்க்குட்டிகள் ஒன்றோடு ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
தனது அம்மாவின் மீது ஏறி இறங்கி சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தது..

ஏதும் சலனமின்றி..கிட்ட தட்ட இறந்த போன உருவம் போல, வயிரெல்லாம் ஒட்டி போய் எதையோ வேடிக்கை பார்த்தவாறு அந்த நாய் தன் பிள்ளைகளின் சேட்டையை கண்டுக்காமல் படுத்திருந்தது...

அந்த சமயம் ஒரு கல் நாயின் மூக்கில்..பட்டு ரத்தம் தெறித்தது.."திடுக்கிட்டு" வேகமாக எழுந்து குட்டிகளை விட்டு ஓடாமல் கதறியது....குட்டிகள் பயத்தில் தாய்க்கு முன் ஒரு புதிரில் சென்று ஒளிந்து கொண்டது...தாயும் அந்த புதரில் சென்று மறைந்து கொண்டது..

"எப்ப பாரு வீட்டு வாசலிலேயே படுத்துட்டு கெடக்குது...என்னைக்கு சாவடிக்க போறேனு தெரில"..என்று சொல்லி கொண்டே ஒரு வாலிபன் தன் வீட்டுக்குள் சென்று மறைந்தான்..

அதன் பின் சிறிது நாட்கள் அந்த நாய் அவன் கண்ணில் படவேயில்லை...

ஒருநாள் மதிய வேளையில் வீடு திரும்பினான் அவன்.

அதே..காட்சி...

நாய்க்குட்டிகள் துறுதுறுவென்று தாயின் மீது ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தது..

இம்முறை முன்பை விட பெரிய கல்லை எடுத்து நாயின் தலையை குறிபார்த்து எறிந்தான்...

ஆனால், இம்முறை நாய்க்குட்டிகள் மட்டுமே சிதறி ஓடின..

அருகே சென்று பார்த்தான்,, அந்த நாய் " முன்பே இறந்திருக்கனும்" என யூகித்தான்...

" சாவுற நாய் வேற எங்கனா போய் சாகாம என் வீட்டு வாசல்தான் கிடைச்சுதா இதுக்கு...இரு உண்ண என்ன பன்றேன் பாரு" என்று உள்ளே சென்றான்.

ஒரு கோணிப்பையை எடுத்து வந்து இறந்து போன நாயையும்..அதன் "குட்டிகளையும் " விரட்டி பிடித்து கோணிப்பையில் போட்டு இருக கட்டினான்.

குட்டிகள் தன் தாய் முகத்திற்க்கு முன் கத்தியது..துடித்தது..." எப்படியும் அந்த புதரில் சென்று ஒளிந்துக்கொள்வோம் என்று போராடியது"..

அதற்க்குள் முடிச்சுகள் அவிழ்க்கபடாமலேயே..
ஒரு முட்புதரில் அந்த கோணிப்பையை வீசி எறிந்துவிட்டு,  ஒரு சைக்கிள் வேகமாக போய்க்கொண்டிருந்தது.

வீட்டிற்க்கு வந்து தோட்டத்திற்க்கு சென்று கையை கழிவிவிட்டு வீட்டின் ஓரமாக வரும்போது தான் அவன் அதை பார்த்தான்...

"ஒரு கொடிய விஷ பாம்பை யாரோ!!! வீட்டிற்குள் நுழைய விடாமல் குதறி பல துண்டுகளாய் சிதறிப் போட்டுள்ளனர்""...


"மிருகங்களை நேசிப்போம்"

~சதிஷ்..

(நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

#பட்டாம்பூச்சியின்_காப்பி

# பட்டாம்பூச்சியின்_காப்பி ராஜ் அவரின் வீட்டு பின்பக்க அறையில் ஜன்னல் வழியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். "வாங்க, நான் தான் ராஜ் இந்த மதிய வேளையில் எங்கள் வீட்டில் அனைவரும் சிறிய உறக்கம் கொள்வார்கள்.. ஆனால், எனக்கு இரவிலும் கூட தூக்கம் என்பதே வராது.. எதையாவது யோசித்தபடியே இருப்பேன்".. "டிவிங்...... ராஜின் வாட்ஸ்அப் மெசேஜ் குறுக்கிட்டது" "என் பொழுது போக்கே வாட்சப், பேஸ்புக், புத்தகங்கள் தான்".. வாட்சப்பில் வந்த செய்தியை படித்து விட்டு வேகமாக எழுந்து புத்தகங்கள் அடிக்கி வைத்திருக்கும் பகுதியில் எதையோ தேடினார்... "பட்டர்பிளை  எஃபெக்ட்"... "சென்னையில் சுனாமி வர காரணம் கூட இந்த பட்டர்பிளை எஃபெக்ட் ஆக இருக்கலாம் என்று வாட்சப் பில் எவனோ பார்வெட்  பன்னி இருக்கான்".. "என் நீண்ட நாள் தேடலும் அதுதான்.. இதோ "பட்டர்பிளை எஃபெக்ட்" பற்றிய புத்தகம்.." "இதில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த பெரிய விளைவுகள் அதே காலக்கட்டத்தில் நடந்த சிறிய நிகழ்வுகளுடன் தொடர்புள்ளதை  அலசி ஆராய்ந்து எழுதியுள்...

நினைவுகளில்_வீடு

     குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம்.  போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார். "ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார்.  யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள். விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம். ஒரு மல்லிக்கொடி படிக்...

மரமும் மனிதனும்.

மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்..  ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...