முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

WATSAPP- TELEGRAM - SIGNAL

     வாட்சப் - டெலகிராம் - சிக்னல்


பேஸ்புக்  தற்போது வாட்சப்பில் ஏற்படுத்திய புதிய மாறுதல்களால் மக்கள் அதிகமாக, வாட்ஸ்அப் விட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிக்கு தங்களை மாற்றி கொண்டு உள்ளனர்.

இந்த மூன்று செயலிகளிலும் உள்ள நல்லவை கெட்டவைகளை நாம் தெரிந்து கொள்வோம்.

மூன்று செயலிகளை பற்றியும் அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

வாட்ஸ்அப்

  தற்போது உலகில் அதிகப்படியான பெரும்பாலோனோர் உபயோகிப்பது இந்த செயலியை தான். ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனம் வாட்சப் இல் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றங்களினால், வாட்சபில் பிரைவசி என்பது கேள்வி குறியாகி உள்ளது. 

   வாட்சப் செயலியில் இருந்து ஒவ்வொரு தனி மனிதனின் தரவுகளையும் பேஸ்புக் நிறுவனம் சேகரித்து அதனை பயன்படுத்தி அந்தந்த தனிநபர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற் போல் விளம்பரங்களை வழங்க திட்டமிட்டளது பேஸ்புக் நிறுவனம்.

இதனால் உங்கள் தகவல்கள் பேஸ்புக் மிக பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும், விளம்பரங்கள் அளிப்பதற்கான விருப்பங்களை தெரிந்து கொள்ள மட்டுமே இந்த தகவல்கள் பயன்படுத்தும் என்றும், வேறு எந்த செயலுக்கும் உங்கள் தரவுகள் பயன்படுத்த மாட்டோம் என்றும்.. மிகவும் பாதுகாப்பாக உங்கள் தரவுகள் நாங்கள் சேகரித்து வைப்போம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெலிகிராம்:

 பிரபலமாக உபயோகிப்பது இந்த செயலியை தான். இளைஞர்கள் அதிகம் உபயோகிக்க நிறைய விசயங்களை கொண்டுள்ளது இந்த செயலி. திரைப்படங்கள், வெப் சீரியஸ் கள் போன்றவற்றை பெற இந்த செயலி அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.
  
மேலும், வாட்சப் போன்றே இந்த செயலியிலும் என்ட் டு என்ட் என்கிரிப்சன் பயன்படுத்த ஏதுவாக சீக்ரெட் சாட் என்ற வசதியையும் டெலிகிராம் கொண்டுள்ளது.

பேஸ்புக் போன்று விளம்பரங்களை நம்பி இந்த டெலிகிராம் செயலி செயல்படவில்லை. விளம்பரங்களால் ஒரு ரூபாய் வருமானத்தை கூட பெற்றதில்லை‌.

சிக்னல்

வாட்சப்பில்,   தற்போது ஏற்பட்ட மாறுதல்களுக்கு பின்தான் இந்த சிக்னல் செயலியை பற்றி பெரும்பாலானோர்களுக்கு தெரிய வந்திருக்கும்.
  ஆனால், இந்த சிக்னல் செயலி ஆரம்பித்தவர் வாட்சப்பை உருவாக்கியவர் தான் என்பது பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்காது. வாட்சப்பை உருவாக்கியவரும் வேறு ஒருவரும் இனைத்து உருவாக்கியது தான் இந்த சிக்னல் செயலி.
  சிக்னல் செயலியின் சிறப்பு என்னவென்றால் அது முழுக்க முழுக்க பாதுக்காப்பான அம்சங்களை கொண்டது. மக்கள் பகிரும் எந்த தகவல்களும் எங்கேயும் சேமித்து வைக்கபடுவதில்லை‌. ஏன், சிக்னல் செயலியினால் கூட மக்களின் தகவல்களை பெறமுடியாத அளவு பாதுகாப்பானது. 
  மேலும், விளம்பரங்களினாலோ, மற்ற எந்த வகையிலோ ஒரு ரூபாய் கூட சம்பாதித்திராத சிக்னல் செயலி, அதன் பயனாளர்கள் விரும்பினால் அனுப்பும் டொனேசன்களை மட்டுமே பெற்றுக் கொள்கிறது.

நிறை - குறைகள்

     வாட்சப்:
                    எனக்கு , என்னுடைய தகவல்களை பெற்றுக்கொண்டாலும் பரவாயில்லை, வாட்சப் என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் உபயோகிப்பதாலும் , எளிமையான இதன் பயன்பாடு எனக்கு பழகிவிட்டதாலும் நான் இதை தான் உபயோகிப்பேன் என்பவர்கள் வாட்சப் செயலியை உபயோகிக்கலாம்.
  ஆனால், இதன் மூலம் நமது அனைத்து தகவல்களும் பேஸ்புக் பெற்று நமக்கேற்றவாறு விளம்பரங்களை பகிரும் என்பது உண்மை.

     டெலிகிராம்
                     ‌‌ புதியவைகளை விரும்புபவர்களுக்கு டெலிகிராம் செயலி மிகவும் பிடித்தது. அடுத்து வரும் நாட்களில் நிறைய புதிய மாறுதல்களை ஏற்படுத்தி கொண்டே இருக்கும் இந்த செயலி.
     திரைப்படங்கள், வெப் சீரியஸ்கள் பார்க்க இது மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  தன்னால் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பவர்கள் டெலிகிராம் செயலியில் உள்ள சீக்ரெட் சாட் ஆப்சனை உபயோகிக்கலாம். நிறைய புதிய அப்டேட்களை விரும்புவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

     சிக்னல்
                    பிரைவசியை விரும்புபவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். பிரைவசி தான் இந்த செயலியின் முக்கிய பயன்பாடு. 
  தங்கள் தகவல்கள் யாருக்கும் தெரியாமல் பிரைவசியாக , பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பவர்கள் இந்த செயலியை தாளாரமாக பயன்படுத்தலாம்.

~ சதிஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

#பட்டாம்பூச்சியின்_காப்பி

# பட்டாம்பூச்சியின்_காப்பி ராஜ் அவரின் வீட்டு பின்பக்க அறையில் ஜன்னல் வழியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். "வாங்க, நான் தான் ராஜ் இந்த மதிய வேளையில் எங்கள் வீட்டில் அனைவரும் சிறிய உறக்கம் கொள்வார்கள்.. ஆனால், எனக்கு இரவிலும் கூட தூக்கம் என்பதே வராது.. எதையாவது யோசித்தபடியே இருப்பேன்".. "டிவிங்...... ராஜின் வாட்ஸ்அப் மெசேஜ் குறுக்கிட்டது" "என் பொழுது போக்கே வாட்சப், பேஸ்புக், புத்தகங்கள் தான்".. வாட்சப்பில் வந்த செய்தியை படித்து விட்டு வேகமாக எழுந்து புத்தகங்கள் அடிக்கி வைத்திருக்கும் பகுதியில் எதையோ தேடினார்... "பட்டர்பிளை  எஃபெக்ட்"... "சென்னையில் சுனாமி வர காரணம் கூட இந்த பட்டர்பிளை எஃபெக்ட் ஆக இருக்கலாம் என்று வாட்சப் பில் எவனோ பார்வெட்  பன்னி இருக்கான்".. "என் நீண்ட நாள் தேடலும் அதுதான்.. இதோ "பட்டர்பிளை எஃபெக்ட்" பற்றிய புத்தகம்.." "இதில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த பெரிய விளைவுகள் அதே காலக்கட்டத்தில் நடந்த சிறிய நிகழ்வுகளுடன் தொடர்புள்ளதை  அலசி ஆராய்ந்து எழுதியுள்...

நினைவுகளில்_வீடு

     குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம்.  போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார். "ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார்.  யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள். விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம். ஒரு மல்லிக்கொடி படிக்...

மரமும் மனிதனும்.

மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்..  ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...