வாட்சப் - டெலகிராம் - சிக்னல் பேஸ்புக் தற்போது வாட்சப்பில் ஏற்படுத்திய புதிய மாறுதல்களால் மக்கள் அதிகமாக, வாட்ஸ்அப் விட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிக்கு தங்களை மாற்றி கொண்டு உள்ளனர். இந்த மூன்று செயலிகளிலும் உள்ள நல்லவை கெட்டவைகளை நாம் தெரிந்து கொள்வோம். மூன்று செயலிகளை பற்றியும் அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும். வாட்ஸ்அப் : தற்போது உலகில் அதிகப்படியான பெரும்பாலோனோர் உபயோகிப்பது இந்த செயலியை தான். ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனம் வாட்சப் இல் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றங்களினால், வாட்சபில் பிரைவசி என்பது கேள்வி குறியாகி உள்ளது. வாட்சப் செயலியில் இருந்து ஒவ்வொரு தனி மனிதனின் தரவுகளையும் பேஸ்புக் நிறுவனம் சேகரித்து அதனை பயன்படுத்தி அந்தந்த தனிநபர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற் போல் விளம்பரங்களை வழங்க திட்டமிட்டளது பேஸ்புக் நிறுவனம். இதனால் உங்கள் தகவல்கள் பேஸ்புக் மிக பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும், விளம்பரங்கள் அளிப்பதற்கான விருப்பங்களை தெரிந்து கொள்ள மட்டுமே இந்த தகவல்கள் பயன்படுத...
குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம். போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார். "ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார். யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள். விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம். ஒரு மல்லிக்கொடி படிக்...